தொளசம்பட்டி ஸ்ரீ அப்ரமேய பெருமாள் திருக்கோயிலில் 05.02.2014 புதன்கிழமை
அன்று மாலை 7.00 மணியளவில் ஸ்ரீ துளசி அலமேலு மங்கா சமேத அப்ரமேய பெருமாள்
திருக்கல்யாணம் நடைபெறுகிறது.அதை தொடர்ந்து 06.02.2014 வியாழக்கிழமை
ரதசப்தமியன்று மாலை 5.00 மணியளவில் திருத்தேர் நிலைப்பெயர்த்தல்,07.02.2014
அன்று மாலை 5.00 மணியளவில் திருத்தேர் நகர் வலம் வருதல் 08.02.2014 மாலை
5.00 மணியளவில் திருத்தேர் நிலைசேர்த்தல் என 3 நாட்கள் தேர்பண்டிகையானது
நடைபெறுகிறது.சேலம் தொழிலதிபர் பேராசிரியர் திரு.N.ராஜாமணி அய்யர்
அவர்களின் மகன் குமாரர் திரு R.சந்திரசேகர் அவர்கள் தலைமை ஏற்கவும்,சேலம்
பெரியவர் திரு டி.எம்.வெங்கடராமன் அவர்களின் பேரன் திரு முரளி {எ}
ஸ்ரீனிவாசன் முன்னிலை வகிக்க நடைபெறுகிறது.தேர் பண்டிகையானது 2.2.2014
ஞாயிற்றுக்கிழமை இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
No comments:
Post a Comment